பாண்டியன் ஸ்டோர்ஸ்</a>, விஜே சித்ரா கணவர்" width="1440" height="1800" /> மறைந்த சின்னத்திரை நடிகை விஜே சித்ராவின் மரண வழக்கு மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவர் ஏற்று நடித்த முல்லை கதாபாத்திரம் சித்ராவுக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது.
இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி பூந்தமல்லியில் உள்ள தனியார் ஹோட்டல் அறையில் சடலமாகக் கிடந்தார் சித்ரா.
முன்னதாக சித்ராவுக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்துக் கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்த விஷயம் சித்ரா மரணத்திற்குப் பிறகு தான் வெளியுலகிற்கு தெரிய வந்தது.
சம்பவத்தன்று சித்ராவும், ஹேம்நாத்தும் ஒன்றாகவே ஹோட்டல் அறையில் இருந்திருக்கிறார்கள். இதையடுத்து தனது மகளை கொலை செய்துவிட்டு, அதை ஹேமந்த் தற்கொலையாக மற்றுவதாக சித்ராவின் தாயார் புகாரளித்தார்.
இதையடுத்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை காவல் துறையினர் கைது செய்தனர். தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஹேம்நாத். 60 நாட்கள் ஆகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததைக் கருத்தில் கொண்டு ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம்.
இந்நிலையில் சித்ராவின் மரணத்தில் ஒரு முக்கிய அரசியல் தலைவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார் ஹேம்நாத். "சித்ரா மரணத்திற்கு காரணமான அரசியல் தலைவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. உண்மையை சொன்னால் உன்னை கொன்றுவிடுவோம் என மிரட்டுகிறார்கள். நான் உயிருக்கு பயந்து என்னுடைய வழக்கறிஞர் வீட்டில் தங்கியிருக்கிறேன். எனது மனைவியின் மறைவிற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை நான் உயிர் வாழ விரும்புகிறேன். ஒரு வேளை அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் முன்னரே இறந்துவிடும் நிலை வந்தால் என் மனைவி இறப்பதற்கு முன் என்னிடம் கூறிய தகவல்களை வெளியிடுவேன்" என கூறியுள்ளார்.